ஓமலூரில் திமுக சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

ஓமலூர், நவ.1: ஓமலூரில் திமுக சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஓமலூர் வட்டாரத்தில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஓமலூர் ஒன்றிய, நகர திமுக சார்பில் டெங்கு ஒழிப்பு, பன்றி காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. நகர பொறுப்பாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் குப்புசாமி, செல்வகுமரன், ரவிச்சந்திரன், ராஜ ஆய்யப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர்.  பேரணியை சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். ஓமலூர் அண்ணா சிலையில் தொடங்கிய பேரணி, தர்மபுரி சாலை, கடைவீதி, மேட்டூர் சாலை உட்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து ஓமலூர் பேருந்து நிலையத்தை அடைந்தது. இதை தொடர்ந்து பொதுமக்களிடம் டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. பேரணியில் மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன், பொருளாளர் சுபாஷ், செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கராஜ், நாசர்கான், பாலசுப்பிரமணி, மாவட்ட துணை செயலாளர் திருநாவுக்கரசு, மாணவரணி மாவட்ட அமைப்பாளர் அருண்பிரசன்னா, இளைஞரணி மதிவாணன், அவைத்தலைவர் சுப்பிரணி, விவசாய அணி கருணாகரன், பிரகாஷ், ரமேஷ், சரளாதுரை, பழனியம்மாள் சரவணன், ஒகே.சிவமகேந்திரன், பிரபு, மணி, ஜெயவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: