அரசியல் கட்சி அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம்: தலைவர்கள் கொடியேற்றினர்

சென்னை: குடியரசு தின விழாவை முன்னிட்டு, தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் கட்சி அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர். குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தேசிய கொடி ஏற்றி வைத்து, சேவா தள பிரிவு சார்பில் நடந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். கட்சியினருக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில், மூத்த தலைவர்கள் ஈவிகேஎஸ்.இளங்கோவன், டாக்டர் செல்லக்குமார், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, துணை தலைவர் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, கீழானூர் ராஜேந்திரன், ரங்கபாஷ்யம், இல.பாஸ்கர், சுமதி அன்பரசு, மயிலை தரணி, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், நாஞ்சில் பிரசாத், முத்தழகன், அடையாறு துரை, டில்லி பாபு, ரஞ்சன் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 தமாகா சார்பில் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

அருகில், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், பொதுச் செயலாளர் விடியல் சேகர், ராஜம் எம்பி நாதன், சக்திவடிவேல், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், முனவர் பாஷா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர்கள் சிவ இளங்கோ, செந்தில் ஆறுமுகம், முரளி அப்பாஸ், ஸ்னேஹா மோகன் தாஸ் முன்னிலையில் மாநில செயலாளர் சரத்பாபு தேசிய கொடி ஏற்றி வைத்தார். இதில் மாவட்ட செயலாளர் ஓம் பிரகாஷ் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னை தலைமை அலுவலகத்தில், மண்டல செயலாளர் மகாலிங்கம் தலைமையில், மாநில பொருளாளர் சுந்தரேசன் தேசிய கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில், தலைமை பேச்சாளர் வேந்தன், சென்னை மண்டல தலைமை நிலையச் செயலாளர் புரசை நாகப்பன், மாவட்டச் செயலாளர்கள் ஆண்டனி, கார்த்திக், குருமூர்த்தி, சந்தனக்குமார், பாலகிருஷ்ணன், எட்ராஜா, கொப்பூர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். எஸ்டிபிஐ கட்சி சார்பில் மண்ணடியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் ரத்தினம் தேசிய கொடி ஏற்றி வைத்தார். இதில், மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது, வர்த்தகர் அணி தலைவர் முகைதீன், தொழிற்சங்க தலைவர் முகமது ஆசாத், மாவட்ட தலைவர் முகமது இஸ்மாயில், பொதுச் செயலாளர் எஸ்.வி.ராஜா, துணை தலைவர் ஜூனைத் அன்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: