சென்னை: சிபிஐ உயரதிகாரிக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற சென்னையை சேர்ந்த கட்டுமான நிறுவன நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வானகரத்தில் செயல்பட்டு வரும் சோமா என்டர்பிரைசஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் துணை தலைவர் ராமச்சந்திர ராவ் என்பவரே கைது செய்யப்பட்டவர். சிபிஐ வழக்கு ஒன்றில் சோமா என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு சாதகமாக நடவடிக்கை எடுப்பதற்காக சிபிஐ டிஐஜி அஸ்ரா கார்கிற்கு ராமச்சந்திர ராவ் ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார்.