நவராத்திரி கொலு துவங்கியதையொட்டி மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஓசூர்: ஓசூர்-தேன்கனிக்கோட்டை சாலை, மத்திகிரி கூட்ரோட்டில் அமைந்துள்ள பழமைவாய்ந்த சுயம்பு கோட்டை மாரியம்மன் கோயிலில், நேற்று நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இக்கோயிலில் மகாளய அமாவாசை முதல் விஜயதசமி வரையில் அம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம்.

இந்த ஆண்டும் நவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த 8ம் தேதி முதல் 19ம் தேதி வரை தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு பூஜையின் இரண்டாம் நாளான நேற்று அம்மனுக்கு 10 ஆயிரம் வளையல்களை மாலையாக அணிவித்து பட்டாடை உடுத்தி ஆபரணங்கள் அணிந்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. ஓசூர், தேன்கனிக்கோட்டை மத்திகிரி, பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரகணக்கான பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டனர்.

Related Stories: