பூமாயி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா துவக்கம் : 10 நாள் கோலாகலம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு பூமாயி அம்மன் கோயிலில், விதவிதமான கொலு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தது. நவராத்திரியின் முதல் நாளான நேற்று அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. 1ம் திருநாள் முதல் 10ம் திருநாள் வரை தினந்தோறும் மாலையில் லட்ச்சார்சனை நடைபெறும். 2ம் நாளான இன்று பூமாயி அம்மன் தெட்சிணாமூர்த்தி அலங்காரத்திலும், 3ம் நாள் நாளை சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்திலும், 4ம் நாள் ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்திலும், 5ம் நாள் பிட்டுக்கு மண் சுமந்த அலங்காரத்திலும், 6ம் நாள் தந்தைக்கு உபதேசம் செய்யும் அலங்காரத்திலும் காட்சித்தருவார்.

7ம் நாள் தையல் நாயகி அலங்காரத்தில் பகதர்களுககு அருள்பாலிப்பார். அன்று மாலை ஏராளமான பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை நடக்கிறது. 8ம் நாள் மகிஷா சூரமர்த்தினி அலங்காரத்திலும், 9ம் நாள் சிவபூஜை அலங்காரம் நடைபெறும். 10ம் நாள் இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருவார். பின்னர் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெறும். அக்19ம் தேதி மதியம் 12 மணியளவில் இன்பம் மஹால் மற்றும் பிரபா செல்வி மஹாலில் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறும். இதேபோன்று திருப்புத்தூர் திருத்தளிநாதர், யோக பைரவர் கோயில் மற்றும் நின்ற நாராயணப்பெருமாள் கோயில்களிலும் நவராத்திரி விழா தொடங்கியது.

Related Stories: