திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு பூமாயி அம்மன் கோயிலில், விதவிதமான கொலு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தது. நவராத்திரியின் முதல் நாளான நேற்று அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. 1ம் திருநாள் முதல் 10ம் திருநாள் வரை தினந்தோறும் மாலையில் லட்ச்சார்சனை நடைபெறும். 2ம் நாளான இன்று பூமாயி அம்மன் தெட்சிணாமூர்த்தி அலங்காரத்திலும், 3ம் நாள் நாளை சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்திலும், 4ம் நாள் ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்திலும், 5ம் நாள் பிட்டுக்கு மண் சுமந்த அலங்காரத்திலும், 6ம் நாள் தந்தைக்கு உபதேசம் செய்யும் அலங்காரத்திலும் காட்சித்தருவார்.