₹13 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

திருச்செங்கோடு, அக்.15: திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில், ₹13 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனையானது. திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில், மஞ்சள் விற்பனை ஏலம் மூலம் நடைபெற்றது. ஜேடர்பாளையம், சோழசிராமணி, இறையமங்கலம், சங்ககிரி, இடைப்பாடி, கொளத்தூர், ஓமலூர், அரூர், பொம்மிடி, ஊத்தங்கரை, கொடுமுடி பாசூர், அந்தியூர், துறையூர், தம்மம்பட்டி, உப்பிலியாபுரம், ராயவேலூர், செய்யார், தலைவாசல் மற்றும் கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் 250 மூட்டை மஞ்சளை கொண்டு வந்து குவித்தனர். விரலி ரகம் குவிண்டால் ₹9265 முதல் ₹14310 வரையிலும், கிழங்கு ரகம் ₹8895 முதல் ₹12210 வரையிலும் விற்பனையானது. ஆக மொத்தம் 250 மூட்டை மஞ்சள் ₹13 லட்சத்திற்கு விற்பனையானது.

The post ₹13 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: