×

விருதுநகரில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

விருதுநகர்: விருதுநகரில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது. இளம்பெண் பாலியல் வழக்கை  சிபிசிஐடி-க்கு மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.  22 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் 4 பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் பாண்டியநகரை சேர்ந்த 22 வயது இளம்பெண் தாயாருடன் வசித்து வருகிறார். அவருக்கும் அதேபகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஹரிஹரன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அந்தப் பெண்ணுடன் பாலியல் உறவு வைத்து அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதனிடையே அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஹரிஹரனை வற்புறுத்தியுள்ளார். ஆனால் ஹரிஹரன் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதை அடுத்து அந்த இளம்பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  இதற்கிடையில் ஹரிஹரன், ஏற்கனவே பதிவு செய்த வீடியோ காட்சிகளை வைத்து மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். பிறகு அந்த வீடியோவை ஹரிஹரன் தனது நண்பர்களுக்கு சமூக ஊடகம் மூலம் அனுப்பி வைத்துள்ளார். ஹரிஹரனின் நண்பர்களும் அந்த வீடியோவை இளம் பெண்ணிடம் காட்டி மிரட்டி அவருடன் பாலியல் உறவு வைத்ததும், ஹரிஹரன் தொடர்ந்து இளம் பெண்ணை தொந்தரவு செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. விசாரணையில் கிடைத்த தகவல்கள் மற்றும் தடயங்களின் அடிப்படையில் இதில் ஈடுபட்டது 8 குற்றவாளிகள் என தெரியவந்துள்ளது.  இதில் ஹரிஹரன் மாடசாமி ,பிரவீன், ஜுனைத் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். நான்கு பேர் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பதால் ராமநாதபுரம் அரசு கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதன்படி இந்த வழக்குகளுக்கான கோப்புகள் விசாரணை அதிகாரி சிபிசிஐடி அதிகாரி வினோதினியிடம் ஒப்படைத்தார். இன்று காலை சிபிசிஐடி எஸ்பி விருதுநகர் அலுவலகத்திற்கு சென்று 4 பள்ளி மாணவர்கள் தவிர மீதமுள்ள குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளார். …

The post விருதுநகரில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : CBCID ,Virudhunagar ,
× RELATED வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!