×

விபத்தில் மாற்றுத்திறனாளி பலி

தேனி, டிச. 27: தேனி நகர் அன்னஞ்சி பைபாஸ் சாலையில் 3 சக்கர மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாற்றுத்திறனாளி பரிதாபமாக உயிரிழந்தார்.திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே ஜி.தும்மலப்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (41). மாற்றுத்திறனாளியான இவர் நேற்று காலை தேனிக்கு தனது மூன்று சக்கர மோட்டார் சைக்கிளில் வந்தார்.

தேனி அன்னஞ்சியில் இருந்து புதிய பஸ்நிலையத்திற்கு செல்லும் பைபாஸ் சாலையில் வனத்துறை அலுவலகம் அருகே வந்தபோது, சாலை பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தில் படுகாயம் அடைந்த ரவிச்சந்திரன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார். துகுறித்து ரவிச்சந்திரனின் மனைவி மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விபத்தில் மாற்றுத்திறனாளி பலி appeared first on Dinakaran.

Tags : Theni ,Annanji ,Theni Nagar ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டம் முழுவதும் அண்ணா பிறந்தநாள் விழா உற்சாக கொண்டாட்டம்