×

விஜய் வசந்த் எம்பி குறித்து அவதூறு காவல் நிலையங்களில் காங்கிரசார் புகார்

குலசேகரம், ஜூன் 23: விஜய்வசந்த் எம்.பி சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது நடிகர் விஜய் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் என்று கூறியிருந்தார். இதனை பாஜகவை சேர்ந்த ஒருவர் அவதூறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையங்களில் புகார் கொடுத்து வருகின்றனர். இதே போன்று நேற்று முன்தினம் திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் வட்டார தலைவர் வழக்கறிஞர் ஜெபா தலைமையில் திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரெத்தினகுமார், மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட பொருளாளர் ஐஜிபி லாறன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குளச்சல்: குளச்சல் டி.எஸ்.பி. அலுவலகத்தில் தேசிய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமையில், அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு புகார் அளிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் முனாப், நகர தலைவர் சந்திரசேகர், கவுன்சிலர் ரமேஷ், கல்லுக்கூட்டம் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஸ்டார்வின் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

களியக்காவிளை: இதேபோல் குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர் தலைமையில் களியக்காவிளை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அப்போது மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் அமீர், மேல்புறம் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ரவிசங்கர், களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், விளவங்கோடு ஊராட்சித்தலைவர் லைலா ரவிசங்கர், களியக்காவிளை நகர காங்கிரஸ் தலைவர் பெனட் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அருமனை: மேல்புறம் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் கிங்ஸ்லி சாலமோன் தலைமையில் நேற்று கடையாலுமூடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இதில் சத்தியராஜ், சுந்தர், உமர், செல்லசாமி, பொன்னையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அருமனை காவல் நிலையத்திலும் மேல்புறம் கிழக்கு வட்டார முன்னாள் காங்கிரஸ் தலைவர் சதீஸ் தலைமையில் காங்கிரசார் மனு அளித்துள்ளனர்.

The post விஜய் வசந்த் எம்பி குறித்து அவதூறு காவல் நிலையங்களில் காங்கிரசார் புகார் appeared first on Dinakaran.

Tags : Congress ,Vijay Vasant ,Kulasekaram ,Vijay ,DMK ,Dinakaran ,
× RELATED சுங்கச்சாவடிகள் முன் காங்கிரஸ்...