புதுடெல்லி: தண்டவாளத்தை கடந்தபோது, கடந்த 3 ஆண்டுகளில் ரயில் மோதி சுமார் 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக மக்களவையில் மத்திய ரயில்வே இணையமைச்சர் ராஜன் கோஹைன் தெரிவித்தார். ரயில் மோதி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செல்போன் பேசியபடியும், அவசர அவசரமாகவும் தண்டவாளத்தை கடக்கின்றனர். ரயில் வருவதை கவனிக்காமல் செல்வதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளில், தண்டவாளத்தை கடந்து சென்றபோது ரயில் மோதி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49,790 பேர் என மத்திய ரயில்வே இணையமைச்சர் ராஜன் கோஹைன் நேற்று மக்களவையில் தெரிவித்தார்.