வயநாடு பேரிடருக்கு நிவாரணம்

கம்பம், ஆக. 10: வயநாடு பேரிடர் நிவாரணத்திற்கு தங்களது ஒரு நாள் வருமானம் ரூ.70 ஆயிரத்தை சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தனர். சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் சார்பாக ஆட்டோ சங்க தலைவர் லெனின், செயலாளர் பாலகுருநாதன், பொருளாளர் அப்பாஸ், துணைச் செயலாளர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் வஉசி திடல் ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து காலை 7 மணி முதல் இரவு வரை சுமார் நூற்றுக்கு மேற்பட்ட ஆட்டோ வாடகை வருமானம் ரூ70 ஆயிரத்தை கேரளா முதல்வரின் வயநாடு நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தனர்.

The post வயநாடு பேரிடருக்கு நிவாரணம் appeared first on Dinakaran.

Related Stories: