×

வடமாநில வாலிபர் ரயில் மோதி சாவு

 

விருதுநகர், மே 4: விருதுநகர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற வடமாநில வாலிபர் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.ஒடிசா மாநிலம், நபரங்கபூர் மாவட்டத்தைச சேர்ந்தவர் ராதேஷ்யாம் கண்டா(27). இவர் விருதுநகர் அருகே சூலக்கரையில் உள்ள தனியார் போர்வெல் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று காலை துலுக்கபட்டி பகுதிக்கு வேலைக்காக சென்றார்.

விருதுநகர்-தூத்துக்குடி செல்லும் ரயில்வே தண்டவாளப் பகுதியை ராதேஷ்யாம் கண்டா கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி இருப்பு பாதை காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வடமாநில வாலிபர் ரயில் மோதி சாவு appeared first on Dinakaran.

Tags : State ,Virudhunagar ,Dinakaran ,
× RELATED பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து