கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வில் மண் பரிசோதனை செய்து மக்கள் வாழ்ந்த ஆண்டுகளை கணக்கிடுவதற்கான ஆய்வு பணிகள் தொடக்கம்!!

சிவகங்கை:  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 6ம் கட்ட அகழாய்வில் மண் பரிசோதனை செய்து மக்கள் வசித்த ஆண்டுகளை கணக்கிடுவதற்கான ஆய்வு பணிகள் தொடங்கியுள்ளன. திருப்புவனம் தாலுகாவில் உள்ள கீழடி, கொந்தகை, மணலூர் உள்ளிட்ட கிராமங்களில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை தொல்லியல் துறையினர் நடத்திய  6ம் கட்ட அகழாய்வில் பழங்காலத்தில் பயன்படுத்திய தங்க காதணி, பெரிய விலங்கின் எலும்பு, முதுமக்கள் தாழிகள், அச்சுக்கள், இருவண்ண பானைகள், உறைகிணறு, உலைகலன், பானை ஓடுகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.  

இந்நிலையில் மண்ணின் தன்மை குறித்தும் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக மத்திய புவியியல் குழுவினர் மண் மாதிரிகளை சேகரித்துள்ளன. இதனை ஆய்வு செய்து கீழடியில் மக்கள் வாழ்ந்த ஆண்டுகளை கணக்கிட வாய்ப்பிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, மண் பரிசோதனையில் மேலும் பல தகவல்கள் கிடைக்குமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தொல்லியல் ஆய்வு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கீழடியில் பார்வையாளர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

Related Stories: