கணிசமாக உயரும் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.128 உயர்ந்து, ரூ.33,856-க்கு விற்பனை !

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.34 ஆயிரத்தை நெருங்கியது. தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கொரோனா தொற்று பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. இதனையடுத்து, தங்கத்தின் விலை இன்று விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து, ரூ.33,856-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து, ரூ.4,232-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.200 குறைந்து, ரூ.69,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: