புதுடெல்லி: கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள், பலத்த பாதுகாப்புடன் அசாம், மேற்கு வங்கத்தில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில், 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாகவும், 126 தொகுதிகளை கொண்ட அசாம் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. மற்ற மூன்று மாநிலங்களிலும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாக 5 மாவட்டங்களில் இருக்கும் 30 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. பஸ்சிம் மிட்னாபூர் பிரிவு-1, புர்பா மிட்னாபூர் பிரிவு -1, பன்குரா, ஜர்கிராம் மற்றும் புருலியா ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
அசாம், மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம் : மாஸ்க், கையுறை அணிந்தபடி ஜனநாயக கடமையாற்றும் வாக்காளர்கள்!!
