ரத்ததான முகாம்

உத்தமபாளையம், ஆக. 18: உத்தமபாளையம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை சார்பில மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் நடந்த ரத்ததான முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை தலைவர் ஜியாவுதீன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள், ஹாட்ஸ்பாட் முஹம்மது இப்ராஹிம் சேட், பீர் முஹம்மது, முகம்மது இப்ராஹிம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் நூற்றுக்கு அதிகமானோர் ரத்த தானம் செய்தனர். தொடர்ந்து நகரில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும், ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மாவட்ட ரத்ததான பொறுப்பாளர், அசரப் அலி நன்றி கூறினார்.

The post ரத்ததான முகாம் appeared first on Dinakaran.

Related Stories: