திருமலை : எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சிக்னலை சேதப்படுத்தி அனந்தப்பூர் மாவட்டத்தில் பயணியிடம் நகை பறித்த கும்பல் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எழும்பூரில் இருந்து காச்சிகூடா செல்லக்கூடிய எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் வழக்கம் போல் சென்று கொண்டிருந்தது. ஆந்திராவின் தாடிபத்திரி மண்டலம், வங்கணூர் கிராமம் அருகே சென்றபோது மர்ம நபர்கள் சிலர் ரயில் சிக்னல் ஒயரை அறுத்தனர். இதனால் ரயில் செல்வதற்கான சிக்னல் கிடைக்காததால் டிரைவர் ரயிலை நிறுத்தினார்.
சென்னை ரயிலின் சிக்னலை சேதப்படுத்தி பயணியிடம் நகை பறித்த கும்பல் மீது துப்பாக்கிச்சூடு : போலீசார் அதிரடி நடவடிக்கை
