சென்னை: கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தி இன்றுடன் ஆறு மாதம் நிறைவடைந்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வெளி நாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. மேலும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மார்ச் 25ம் தேதி தொலைக்காட்சி மூலம் நாட்டு உரையாற்றிய மோடி 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
கொரோனா தொற்று பாதிப்பு: ஊரடங்கு அமல்படுத்தி 6 மாதம் நிறைவு
