×

மைத்துனரை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது

கடத்தூர், ஜூலை 8: தர்மபுரி மாவட்டம், மணியம்பாடியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் பிரதாப் (23), கூலி தொழிலாளி. இவரது தங்கை சரண்யாவை, அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(36) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்நிலையில், குடும்ப பிரச்னையில் கடந்த 5ம் தேதி, சரண்யாவை பிரதாப் அடித்துள்ளார். இதையறிந்த பெருமாள், சதீஷ்குமாரிடம் கேட்டபோது, அவரையும் அடித்துள்ளார். இதையடுத்து, 6ம் தேதி மாலை பிரதாப், சதீஷ்குமாரின் வீட்டுக்குச் சென்று தனது தந்தையை ஏன் தாக்கினாய் என தட்டிக்கேட்டுள்ளார். இதில், அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு, கைகலப்பானது.

அப்போது, சதீஷ்குமார் அங்கு கிடந்த கட்டையால் பிரதாப்பை தாக்கினார். இதில், நிலைகுலைந்த அவரை, ஆத்திரம் அடங்காத சதீஷ்குமார் அரிவாளால் தலையில் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் பிரதாப் மயங்கினார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில், சதீஷ்குமாரை கடத்தூர் போலீசார் கைது செய்து, பாப்பிரெட்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post மைத்துனரை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Tags : Kadoor ,Pratap ,Perumal ,Maniambadi, Dharmapuri district ,Saranya ,Satish Kumar ,
× RELATED நாகப்பட்டினம் சௌந்தரராஜப் பெருமாள்