உடன்குடி, பிப். 27: உடன்குடி அருகே உள்ள தாங்கைகைலாசபுரத்தை சேர்ந்த சந்தோஷ் மகன் வேல்(24), இவரது சகோதரி கணவரான அரசூர் பூச்சிகாட்டை சேர்ந்த கருப்பசாமி மகன் ஜெய்முருகன்(40). இருவரும் கூட்டாக சேர்ந்து மரம் வெட்டும் தொழில் செய்து வந்துள்ளனர். திடீரென வேல் பிரிந்து தனியாக மரம் வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார் இதனால் இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று வேல் வீட்டில் இருக்கும்போது வந்த ஜெய்முருகன், அவரது நண்பர்களான தேரியூர் செல்வம் (20), சென்னையை சேர்ந்த சக்தி ஆகியோர் தகராறு செய்து அரிவாளால் வெட்டினர். இதில் வேலுக்கு இடது காலில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த வேலை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மைத்துனருக்கு அரிவாள் வெட்டு: 3 பேர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.