மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் நடிகர் யோகி பாபு தரிசனம்

 

மேட்டுப்பாளையம்,ஜூலை21: மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டின் ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 18 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. வரும் 25 ஆம் தேதி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

காமெடி நடிகரும்,குணச்சித்திர நடிகருமான யோகிபாபு நேற்றிரவு வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வருகை தந்தார். அம்மனை வழிபட்ட யோகிபாபுவிற்கு கோவில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அம்மனை வழிபட்ட பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள புத்தக நிலையத்திற்கு சென்ற நடிகர் யோகிபாபு அங்கு ரூ.5 ஆயிரம் மதிப்பிலான ஆன்மீக புத்தகங்களை விலைக்கு வாங்கி சென்றார். யோகிபாபு வருகை குறித்து அறிந்த 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் திரண்டு அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

The post மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் நடிகர் யோகி பாபு தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.