சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2020-21ம் கல்வி ஆண்டில் ஏற்பட்டுள்ள முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை1, கணினி பயிற்றுநர் நிலை 1 பணியிடங்களை நிரப்ப அரசு அறிவித்தது. அதற்கான போட்டித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் 9ம் தேதி வெளியிடப்பட்டது. போட்டித் தேர்வு எழுத விரும்புவோர் இணைய தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்ததின் பேரில் செப்டம்பர் 18ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ் வழியில் படித்தோருக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால், அதுகுறித்து விவரங்களை பதிவேற்றம் செய்ய வசதியாக, மென்பொருளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. மேலும் பல்வேறு விண்ணப்பதாரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி 17ம் தேதிக்கு பதிலாக 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது….
The post முதுநிலை ஆசிரியர், கணினி பயிற்றுநர் பதவிக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு: டிஆர்பி அறிவிப்பு appeared first on Dinakaran.