முதியவருக்கு 7 ஆண்டு சிறை

சிவகங்கை, ஜூன் 7:திருப்புவனம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்(53). விறகு வெட்டும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த ஆண்டு ஜூனில் இதே கிராமத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் பழையனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த போஸ்சோ சிறப்பு நீதிபதி சரத்ராஜ், குற்றம் சாட்டப்பட்ட சக்திவேலுக்கு 7 ஆண்டு ஒரு மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10,500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.

The post முதியவருக்கு 7 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: