முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி

 

பெரம்பலூர்,நவ.18: மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5லட்சத்திற்கான காசோலையை பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் வழங்கினார். பெரம்பலூர் மாவட்டம், செங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவர் கடந்த செப்-9ம் தேதி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலையை பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்எல்ஏ பிரபாகரன், உயிரிழந்த கோபால கிருஷ்ணன் குடும்பத்தினரிடம் வழங்கினார். அப்போது பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அம்பிகா, செயற் பொறியாளர் (பொது) சேகர், செயற்பொறியாளர் (இ.கா/ப) அசோக்குமார், உதவி செயற்பொறியாளர் முத்தமிழ் செல்வன், செங்குணம் ஏரி பாசன சங்கத் தலைவர் ரகு ஆகியோர் உடனிருந்தனர்.

The post முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி appeared first on Dinakaran.

Related Stories: