இந்தியாவில் கொரோனா 2வது அலை பேயாட்டம்: மகாராஷ்டிரா, தமிழ்நாட்டில் மோசமாகும் நிலைமை அலட்சியம் காட்டும் மக்கள்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.62 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 1.20 கோடியை  தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 56,211 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,20,95,855 ஆக உயர்ந்தது.

* புதிதாக  271 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,62,114 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 37,028 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,13,93,021 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  5,40,720 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 94.19% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக அதிகரித்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.47% ஆக அதிகரித்துள்ளது.

* இதுவரை இந்தியாவில்  6,11,13,354 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Related Stories: