பெங்களூரு, ஜன.5: பெங்களூரு மட்டும் இன்றி மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது என காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் கூறினார்.பெங்களூரு மைசூரு வங்கி சர்க்கிளில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடந்தது. மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக நடந்த கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் பங்கேற்று பேசியதாவது: பெங்களூரு மட்டும் இன்றி மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. அரசு அலுவலகத்திற்கு வரவேண்டும் என்றால் அதற்கு கூட லஞ்சம் தரவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒவ்வொரு பணிகளுக்கு இவ்வளவு லஞ்சம் தரவேண்டும் என்பது எழுதாத சட்டம் போல் அனைத்து அலுவலகத்திலும் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்ற முறைகேடுகளுக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்கான முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது.
மாநிலத்தில் பாஜ ஆட்சியில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது: டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டு
