விருத்தாசலம், நவ. 20: விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகே உள்ள குருவன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(38). இவரது மனைவி இந்துமதி (26). இருவருக்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில், முகிலன்(10) மதிஷா(7) ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 16ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற இந்துமதி திரும்ப வீடு வரவில்லை. உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில், ஆலடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மனைவி மாயம் கணவர் புகார் appeared first on Dinakaran.