×

மனைவிகளை கைமாற்றும் குழுவில் ரூ.14 ஆயிரம் கட்டணம் செலுத்திய திருமணம் ஆகாதவர்களும் சேர்ப்பு: போலீஸ் விசாரணையில் புதிய தகவல் அம்பலம்

திருவனந்தபுரம்: கேரளாவில் மனைவிகளை கைமாற்றும் குழு சந்திப்பில்  திருமணம் ஆகாதவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதற்காக அவர்களிடம் ரூ.14 ஆயிரம் கட்டணம் பெற்று வந்ததும் போலீஸ் விசாரணையில் வெளியாகி உள்ளது. கேரள மாநிலம், கோட்டயம் அருகே கருகச்சாலையை சேர்ந்த 26 வயது இளம் பெண் சமீபத்தில் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது கணவர் மற்றவர்களுடன் உறவில் ஈடுபட வற்புறுத்துவதாக  குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பான விசாரணையில் கேரளாவில் மனைவிகளை  ஒருவருக்கொருவர் கைமாற்றும் குழு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர். 3 பேரை தேடி வருகின்றனர். அவர்களில் கொல்லத்தை சேர்ந்த ஒருவர் குவைத்திற்கு தப்பி  சென்றுவிட்டதாக தெரியவந்தது. அவரை கேரளா கொண்டு வர போலீசார் நடவடிக்கை  எடுத்து வருகின்றனர். இந்த கும்பலில் மேலும் பல முக்கிய பிரமுகர்கள்  இருப்பதும் தெரியவந்து உள்ளது. அவர்களை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர். இந்நிலையில், மனைவிகளை கைமாற்றும் கும்பல்   குறித்து மேலும் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதுபற்றிய விவரம்  வருமாறு; மனைவிகளை கைமாற்றும் இந்த குரூப்பில் பெரும்பாலும் தம்பதியாக வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். ஆனால், சில முக்கிய  பிரமுகர்களுக்கு இதில் விதி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி திருமணம் ஆகாதவர்களும் கலந்து கொள்ளலாம். இவர்கள் ஸ்டட் என்று அழைப்படுகிறார்கள். இவர்கள் ஒரு முறை வருவதற்கு ரூ.14 ஆயிரம் பணம் கட்டணமாக  செலுத்த வேண்டும். அதன் பிறகு அவர்கள் விரும்பியவர்களுடன் உறவு வைத்து கொள்ளலாம். இந்த குரூப்பில் ஒரே சமயத்தில் 4 பேருடன் உறவு  கொள்பவர்களும் இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் போலீசுக்கு  கிடைத்துள்ளது. வீடுகள் மட்டுமில்லாமல் கேரளாவில் உள்ள சுற்றுலா  மையங்களிலும், ரிசார்ட்டுகளிலும், ஹோம் ஸ்டேகளிலும் இவர்கள் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். சில ரிசார்ட்டுகள் இதுபோல மனைவிகளை  கைமாற்றும் குரூப்பிற்காக மட்டுமே செயல்பட்டு வந்துள்ளதும்  தெரியவந்துள்ளது. இந்த குரூப்பில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 2000க்கு மேற்பட்ட தம்பதிகள் உள்பட 6 ஆயிரம்  பேர் வரை இருப்பதாக போலீசார் கருதுகின்றனர். இவர்கள் அனைவரையும் விசாரணை  வளையத்துக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்….

The post மனைவிகளை கைமாற்றும் குழுவில் ரூ.14 ஆயிரம் கட்டணம் செலுத்திய திருமணம் ஆகாதவர்களும் சேர்ப்பு: போலீஸ் விசாரணையில் புதிய தகவல் அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kerala ,
× RELATED சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி மலையாள நடிகை பலாத்காரம்: டைரக்டர் கைது