மதுரையில் மது விற்ற 17 பேர் கைது

மதுரை, ஜூலை 25: மதுரை நகர் பகுதியில் டாஸ்மாக்கில் மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வோரை போலீசார் தினமும் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மதுரை நகர் பகுதிகளில் அந்தந்த சரக போலீசாரும், மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசாரும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் செல்லூர், கீரைத்துறை, கூடல்புதூர், மாட்டுத்தாவணி பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துகொண்டிருந்த 17 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 128 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post மதுரையில் மது விற்ற 17 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: