×

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து சாலை மறியல் செய்தவர்கள் கைது

காரைக்குடி, ஜூலை 26: காரைக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது. நகர செயலாளர் சிவாஜி காந்தி தலைமை வகித்தார். ஏஐடியூசி மாநில துணைச்செயலாளர் ராமச்சந்திரன், அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற நகர செயலாளர் ரிச்சட், இந்திய மாதர் தேசிய சம்மேளம் பழனியம்மாள், தேவி, லில்லிபுஸ்பம், போக்குவரத்து சங்க தலைவர் மணவழகன், ஏஐடியூசி மாவட்ட துணைச் செயலாளர் கண்ணன், ராமராஜ், மாரிமுத்து, காரைஅன்பு, பாஸ்கரன், ஆரோக்கியம், அய்யப்பன், கருப்பையாஉள்பட பலர் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

The post மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து சாலை மறியல் செய்தவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Manipur ,Karaikudi ,Communist Party of India ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு