மகள் காதல் திருமணம் செய்ததால் தாய் மாயம்

கிருஷ்ணகிரி, செப்.14: ராயக்கோட்டை அடுத்த நெல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன். இவரது மனைவி லட்சுமி(40). இவர்களது மகள், கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். பெற்றோர் தேடுவதை அறிந்துகொண்ட மகள், திங்கட்கிழமை தனது வீட்டுக்கு வந்தார். அப்போது தான் காதல் திருமணம் செய்துக்கொண்டதாகவும், கணவருடன் வாழப்போவதாகவும் கூறியுள்ளார். இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மேலும், தான் கணவருடன் செல்வதாக கூறி விட்டு சென்றுவிட்டார். இதனால் விரக்தியடைந்த லட்சுமி, அன்று மாலை மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், ராயக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மகள் காதல் திருமணம் செய்ததால் தாய் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: