மகளிர் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம்

 

ஒட்டன்சத்திரம், ஆக. 18: சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, ஒட்டன்சத்திரம் ஒன்றியம், மார்க்கம்பட்டி ஊராட்சியில் மகளிர் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் ஐ.வாடிப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் ஜோதிஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஊராட்சி மன்றத்தலைவர் செல்லமுத்து முன்னிலை வகித்தார். வட்டார இயக்க மேலாளர் சித்ராதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கூட்டமைப்பில், சிறப்பாக செயல்பட்டு வரும் குழுவிற்கு விருதுகளும், உணவு திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. கூட்டத்தில், ஊராட்சி செயலர் தனசேகரன், சி.ஆர்.பி.தேவி, குழு கண்காணிப்பாளர் கோதை, கணக்காளர் வடிவுக்கரசி மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழு ஊக்குனர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post மகளிர் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: