×

பைக் மீது கார் மோதி பெண் பரிதாப பலி: உடன் வந்த தம்பி சீரியஸ்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் குணசுந்தரி(50). இவர் தனது தம்பி முருகன்(45) என்பவருடன் நேற்று முன்தினம் இரவு திருப்பாச்சூரில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்காக பைக்கில் சென்றனர். இந்நிலையில், நேற்று காலை பைக்கில் திருவள்ளூர் வழியாக ஆவடி ரோடு காக்களூர் பைபாஸ் சாலையில் சென்று அங்குள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுவிட்டு சாலையை கடந்தனர். அப்போது பின்னால் வந்த கார் இவர்களது பைக்கின் மீது வேகமாக மோதியது.இதில் குணசுந்தரி மற்றும் முருகன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அவ்வழியாக சென்றவர்கள் விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குணசுந்தரி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதில் பலத்த காயமடைந்த முருகன் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post பைக் மீது கார் மோதி பெண் பரிதாப பலி: உடன் வந்த தம்பி சீரியஸ் appeared first on Dinakaran.

Tags : Serious ,Thiruvallur ,Pakkam ,Gunasunasunthari ,Murugan ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்...