பெரம்பலூர் மாவட்டத்தில் ட்டமின் ஏ உயர்ச்சத்து திரவம் அளிக்கும் முகாம்

பெரம்பலூர்,செப்.1: பெரம்பலூர் மாவட்டத்தில் 6 மாதம் முதல் 60 மாதம் வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் ஏ திரவம் 6 மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்பட்டு வருகிறது. வைட்டமின் ஏ திரவம் குழந்தைகள் சராசரி வளர்ச்சியடைய உதவி செய்கிறது. மேலும் கண் பார்வை குறைபாடு வராமல் தடுக்கிறது. அதனடிப்படையில், வருகிற 4ம்தேதி முதல் 9ம் தேதி வரை 43,448 குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உதவியுடன் வீடுவீடாக சென்று வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளது. 6 மாதம் முதல் 60வது மாதம் வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் கொடுத்து பயன் பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் ட்டமின் ஏ உயர்ச்சத்து திரவம் அளிக்கும் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: