×

புழல் அடுத்த சண்முகபுரம் பகுதியில் ரூ.18 லட்சத்தில் கட்டப்பட்ட காரிய மேடை திறப்பு: எம்எல்ஏ பங்கேற்பு

 

புழல், ஆக. 5: புழல் அடுத்த சண்முகபுரம் பகுதியில் ரூ.18 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட காரிய மேடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. மாதவரம் மண்டலம் 32வது வார்டு புழல் அடுத்த சண்முகபுரம் பகுதியில் வார்டு கவுன்சிலர் ஏழுமலை வார்டு மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஈம காரியம் செய்யும் காரியமேடை திறப்பு நேற்று நடந்தது. மாதவரம் மண்டல குழு தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார்.

32வது வார்டு கவுன்சிலர் ஏழுமலை, மண்டல அலுவலர் திருமுருகன், செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் பாஸ்கர், 32வது வார்டு இளநிலை பொறியாளர் தினேஷ் ராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ கலந்து கொண்டு புதிதாக கட்டி முடிக்கப்பட்டு ஈம காரிய மேடை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். இதில், 32வது வட்ட திமுக செயலாளர் புத்தகரம் சரவணன் மாவட்ட பிரதிநிதி ரமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post புழல் அடுத்த சண்முகபுரம் பகுதியில் ரூ.18 லட்சத்தில் கட்டப்பட்ட காரிய மேடை திறப்பு: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Shanmugapuram ,Puzhal ,MLA ,Kariya Medai ,Madhavaram Mandal 32nd Ward Puzhal ,Area Ward ,Ethumalai Ward Development ,Dinakaran ,
× RELATED ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்