தமிழகம் புதுச்சேரியில் இன்று முதல் மது கடைகள் திறப்பு; தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்தது புதுச்சேரி மாநில அரசு Jun 08, 2021 புதுச்சேரி புதுச்சேரி மாநில அரசு முதல் அமைச்சர் ரெங்கசாமி புதுச்சேரி… தின மலர் புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று முதல் மது கடைகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ரெங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மதுக்கடைகளில் மது அருந்தவும், பார்கள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. புதுச்சேரியில் 42 நாட்களுக்கு பிறகு கடற்கரைகள், வழிகாட்டு தலங்கள் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் காய்கறி, மளிகை உள்பட அனைத்து கடைகளையும் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அனைத்து அரசு, தனியார் அலுவலகங்களும் 50% பணியாளர்களுடன் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுநுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்கவும் கூறப்பட்டுள்ளது. … The post புதுச்சேரியில் இன்று முதல் மது கடைகள் திறப்பு; தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்தது புதுச்சேரி மாநில அரசு appeared first on Dinakaran.
குற்றாலத்தின் மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் குளிக்க இன்று மாலை முதல் அனுமதி: பழைய குற்றாலத்தில் குளிக்க நேரகட்டுபாடு அறிவிப்பு
பெரியபாளையம் அம்மன் கோவிலில் 7ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு நாளையொட்டி 108 பெண்கள் பால்குடம் ஏந்தி அபிஷேகம்
பிக்சல் செல்போன் ஆலை அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சந்திக்க திட்டம்
திருவண்ணாமலையில் 2வது நாளாக இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்: தரிசனத்திற்காக 5 மணிநேரம் காத்திருப்பு
பிக்சல் செல்போன் ஆலை அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சந்திக்கின்றனர்!!
சென்னை-புதுச்சேரி பேருந்தை நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தியதற்காக ரூ.1000 அபராதம் விதித்தது போலீஸ்!!
முதல்வரை ஒருமையில் அழைத்துள்ளார்; அதனை ஏற்க முடியாது : சவுக்கு சங்கர் வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து!!
முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்ட முயலும் கேரள அரசின் முயற்சிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!