பாட்னா: பீகார் மாநிலத்தில் சுமார் 125 பேருடன் சென்ற படகு கங்கை ஆற்றில் கவிழ்ந்ததையடுத்து, அதில் பயணித்தவர்கள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தின் நாவ்காச்சியா எனும் பகுதியில் உள்ள கங்கை நதியில் 125 பேர் கொண்ட படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் மிதந்து வருகின்றனர். இதில், சிலர் மீட்கப்பட்ட நிலையில், ஏராளமானோர் காணாமல் போய்விட்டனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
பீகாரில் 125 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து : 5 பேர் சடலமாக மீட்பு.. ஏராளமானோர் மாயம்..தேடும் பணி தீவிரம்
