அறந்தாங்கி: தென் தமிழக கடற்கரை பகுதியில் 45 முதல் 55 வரையிலும் அதிகபட்சமாக 65 கிலோ மீட்டர் வரை காற்று வீசப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியில் உள்ள நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது என்று மீன் வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் இன்று (21ம்தேதி) முதல் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
The post புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை appeared first on Dinakaran.