புதுச்சேரி: புரெவி புயல் காரணமாக புதுச்சேரியில் நேற்று முன்தினம் காலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்றும் 2வது நாளாக காற்றுடன் கனமழை நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஜவகர் நகர், அஜந்தா சிக்னல் உள்ளிட்ட சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இது குறித்து புதுச்சேரி பள்ளிக்கல்வி இணை இயக்குநர் மைக்கேல் பென்னோ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 4ம் தேதி (இன்று) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
புரெவி புயலால் மழை புதுவையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
