புதிய வாக்குச்சாவடி அமைக்கும் பணியை வரும் 28க்குள் முடிக்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: முன்னேற்பாடு கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்

திருச்சி, ஆக.22: வரைவு வாக்குச்சாவடி மையங்கள் இடம் மாற்றம், பெயர் மாற்றம், புதிய வாக்குச்சாவடி அமைத்தல் குறித்தான அரசு அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான முன்னேற்பாடு கூட்டம் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் பிரதீப் குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் கலகெ்டர் பேசியதாவது: வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தயார் செய்வதற்கு முன்பாக தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களையும் நேரடியாக களப்பணி செய்து, வாக்குச்சாவடி மையங்களை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு களப்பணி செய்யும் போது அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளான குடிநீா் கழிப்பறை, சாய்வு தளம், மின்சார வசதி மற்றும் கட்டிட உறுதி தன்மை உள்ளதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டு, கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள வாக்குச்சாவடி மையங்கள் ஏதேனும் பழுதடைந்த நிலையிலோ அல்லது பழமையான கட்டிடமாக இருக்கும் பட்சத்தில், அருகில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு பள்ளி, தனியார் பள்ளி கட்டிடம் அரசு கட்டிடங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினாிடம் ஒப்புதல் பெற்று முன்மொழிவுகள் அனுப்பி வைக்க வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் கோரப்பட்டுள்ளது. நகர் மற்றும் ஊரக பகுதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளும், 1500 – க்கு மேற்பட்ட வாக்காளர்களை கொண்டுள்ள பாகங்களை இரண்டு பாகங்களாக பிரித்திட அறிவுறுத்தப் பட்டுள்ளதுடன், அனைத்து வாக்குச்சாவடிகளும் இருபாலர்களுக்கான வாக்குச்சாவடிகளாக இருப்பதை உறுதி செய்திட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் வாக்குச்சாவடி மையங்கள் தொடர்பான புகார்கள் ஏதும் எழாத வண்ணம், வாக்குச்சாவடி மையங்கள் தேர்வு செய்து, முன்மொழிவுகள் அனுப்பிட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையில் 1.1.2024 -ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு, எதிர்வரும் 5.1.2024 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிட பல்வேறு முன்திருத்த நடவடிக்கைகளுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி 1.1.2024 – ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்கள் நடத்தி எதிர்வரும் 5.1.2024 வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளதை முன்னிட்டு, முன்திருத்த நடவடிக்கையாக குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர் விபரங்களையும் சாிபார்த்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான செயலியில் பதிவேற்றம் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய தோ்தல் ஆணையம் 1.1.2024 நாளை தகுதி ஏற்பு நாளாக கொண்டு 2024 ம் ஆண்டிற்கான வாக்களாளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் நவம்பர்.4, 5, 18,19 ஆகிய தேதிகளில் செய்திட திருச்சி மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், தங்கள் ஆளுகைக்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்களுக்கு தகவல் தொிவித்து, நாளது தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சோ்க்கப்படாமல் விடுபட்டவா்கள், இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், வரைவு வாக்குச்சாவடி மையங்கள் இடம் மாற்றம், பெயர் மாற்றம் புதிய வாக்குச்சாவடி அமைத்தல் பணியானது, 100 சதவீதம் தூய்மையாகவும், இந்திய தோ்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட தேதியான வரும் 28 ம் தேதிக்குள் முடித்திட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்கிட மாவட்ட நிா்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

The post புதிய வாக்குச்சாவடி அமைக்கும் பணியை வரும் 28க்குள் முடிக்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: முன்னேற்பாடு கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: