பாபநாசம் பாலைவனநாதர் கோயிலில் 11ம் ஆண்டு நாட்டியாஞ்சலி

கும்பகோணம், பிப்.27: கும்பகோணம் அருகே பாபநாசம் பாலைவனநாதர் கோயிலில் நடைபெற்ற 11ம் ஆண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் இசை நாட்டிய கலைஞர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருப் பாலைத்துறையில் அமைந்துள்ள பாலைவனநாதர் கோயிலில் 11ம் ஆண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மும்பை, சென்னை, வேலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து இசை நாட்டிய கலைஞர்களின் திருமுறை இன்னிசை, பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நாட்டியாஞ்சலியை கண்டு ரசித்தனர். ஏற்பாடுகளை திருப்பாலை இசை நாட்டிய விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.

The post பாபநாசம் பாலைவனநாதர் கோயிலில் 11ம் ஆண்டு நாட்டியாஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: