பானி பூரி கடை ஊழியருக்கு கத்திக்குத்து; 2 பேர் கைது

கோவை, ஏப்.4: கோவை உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்தவர் ராவுத்தர் கனி (24). இவர் கோவை வ.உ.சி பூங்கா அருகே உள்ள தள்ளுவண்டி பானி பூரி கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வரும் உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த ஜெயனால் ஆசாத் (32), சர்புதீன் (29) ஆகியோருக்கும் இடையே தொழில் போட்டியில் முன் விரோதம் இருந்ததாகவும், அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் பைக்கில் வந்த ஜெயனால் ஆசாத் மற்றும் சர்புதீன் ஆகியோர் பைக்கில் தள்ளுவண்டி கடை மீது மோதி தகராறில் ஈடுபட்டனர். அப்போது ராவுத்தர் கனி அவர்களை எச்சரித்தார்.

ஆத்திரமடைந்த இரண்டு பேரும் ராவுத்தர் கனியை தகாத வார்த்தைகளால் பேசி கத்தியால் குத்தினர். இதில் அவருக்கு முதுகு, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. தடுக்க முயன்ற ராவுத்தர் கனியின் சகோதரர் திப்பு சுல்தான் (30) மற்றும் பக்கத்து கடைக்காரர் மோஸ்கான் என்பவரையும் தாக்கினர். இவர்கள் கத்தியை காட்டி மிரட்டிவிட்டு சென்றனர். இதில் காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் ஜெயனால் ஆசாத் மற்றும் சர்புதீன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

The post பானி பூரி கடை ஊழியருக்கு கத்திக்குத்து; 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.