பஸ்சில் வந்த முதியவர் மாயம்

 

திருமங்கலம், ஜூன் 7: திண்டுக்கல் பேகம்பூரினை சேர்ந்தவர் ஆறுமுகம்(60). இவரது மனைவி அமுதா. ஆறுமுகம் தனது குடும்பத்தினருடன் கடந்த 4ம் தேதி தென்காசியில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு திண்டுக்கல் திரும்பியுள்ளார். அரசுபஸ்சில் ஆரப்பாளையம் சென்றுகொண்டிருந்த போது கப்பலூர் டோல்கேட்டில் யாரிடம் கூறாமல் திடீரென இறங்கிய ஆறுமுகம் அதன்பின்பு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசில் அமுதா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பஸ்சில் வந்த முதியவர் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: