பழுதடைந்த மின்மாற்றியை மாற்ற கோரிக்கை

துவரங்குறிச்சி, செப்.5: கோவில்பட்டி அருகே பழுதடைந்த மின்மாற்றி மின் கம்பங்களை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் மீனவேலி சாலையில் இரண்டு மின் மாற்றிகள் உள்ளன. இதில் ஒரு மின்மாற்றியின் மின் கம்பம் மிகவும் பழுது அடைந்து சிமெண்ட் பூச்சுகள் உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இந்த மின்மாற்றிக்கு அருகில் கடைகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் இயங்கி வருவதால் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் இந்த பகுதியில் சென்று வருகின்றனர். மேலும் இப்பகுதி போக்குவரத்து நிறைந்த பகுதியாகவும் காணப்படுகிறது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின் மாற்றி மின்கம்பத்தை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மின்சார வாரியத்திற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பழுதடைந்த மின்மாற்றியை மாற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: