பழநியில் டிக்கெட் பரிசோதகர் பலி

 

பழநி, ஜூலை 21: பழநி ஹவுஸ்சிங்போர்டை சேர்ந்தவர் கோதண்டபாணி (50). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு செல்ல திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை டூவீலரில் கடந்துள்ளார்.

அப்போது, எதிரே வந்த மற்றொரு டூவீலர் இவரது டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக பழநி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கிசிச்சை பலனின்றி கோதண்டபாணி உயிரிழந்தார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பழநியில் டிக்கெட் பரிசோதகர் பலி appeared first on Dinakaran.

Related Stories: