×

பலமுறை அடித்து மிரட்டியதால் ஆத்திரம் ஆன்லைன் டெலிவரி ஊழியருக்கு வெட்டு: பள்ளி மாணவன் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: ராயப்பேட்டை பி.எம்.தர்கா இஸ்மாயின் கிரவுண்ட் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(20). பிரபல ஆன்லைன் நிறுவனத்தில் டெலிவரி ஊழியர். நேற்று முன்தினம் இரவு ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலை மற்றும் பி.எம்.தர்கா மெயின் தெரு சந்திப்பில் தனது நண்பர்களுடன் பைக்கில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பள்ளி மாணவன் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் கார்த்திக் தலையில் ஓங்கி வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினான். இதில் கார்த்திக் இடது காதின் மேல் பகுதியில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதை பார்த்த நண்பர்கள் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புகாரின்படி ராயப்பேட்டை போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து பள்ளி மாணவனை கைது செய்து விசாரணை நடத்தினர்.அப்போது பள்ளி மாணவன் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: ராயப்பேட்டை சைவ முத்தையா 6வது தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் அருகில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது அடிக்கடி வழிமறித்து கார்த்திக் அவனை அடித்து மிரட்டி வந்துள்ளார். இதனால் மாணவன் பல்லாவரம் சந்தைக்கு சென்று அரிவாளை வாங்கி கார்த்திக்கை வெட்டி அரிவாளையும் அங்கேயே போட்டுவிட்டு ஓடியுள்ளான். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்….

The post பலமுறை அடித்து மிரட்டியதால் ஆத்திரம் ஆன்லைன் டெலிவரி ஊழியருக்கு வெட்டு: பள்ளி மாணவன் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Rayapettu B. MM Karthik ,Dargah Ismai ,
× RELATED பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை...