தமிழகத்தில் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் - அமைச்சர் தங்கமணி

சென்னை: தமிழகத்தின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழகச் சட்டப்பேரவையில் மின்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து, விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதால் வேளாண்மை பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

அதற்குப்பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு விளைநிலங்களில் உள்ள மின்கோபுரங்கள் வழியாகத்தான் மின்சாரம் கொண்டுவரப்படுவதாகத் தெரிவித்தார். விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படும்போது நிலத்தின் மதிப்பைவிட இரண்டரை மடங்கு மூன்றரை மடங்குத் தொகை விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் தமிழகத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் மின் தேவையைக் கருத்தில் கொண்டும் மின் கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டார்.

டாஸ்மாக் மூலம் அரசுக்கு கிடைக்கவேண்டிய வருவாய் ரூ.26,995 கோடியிலிருந்து ரூ.26,794 கோடியாக குறைந்துள்ளது என்று மதுவிலக்கு ஆய்த்தீர்வை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் கூறப்பட்டுள்ளது. 1,520 டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  கொள்கை விளக்க குறிப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

வருங்கால மின்தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக, 2 ஆயிரத்து 500 மெகாவாட் அளவிற்கு புனல் மின்திட்டங்கள், 13 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு அனல் மின்திட்டங்களையும் கூடுதலாக நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக மின்துறை கொள்கைவிளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மீதான மானிய கோரிக்கைகளை அமைச்சர் தங்கமணி பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது பேசிய அமைச்சர், பழுதடைந்த மின்மாற்றிகள் ஒரு மாதத்திற்குள் சரி செய்யப்படும் எனவும், இந்தாண்டு மட்டும் கோடைக்காலத்தில் 1 லட்சத்து 66 ஆயிரம் பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றம் செய்யப்படுள்ளதாகவும் கூறினார். தவறுகளை தடுக்கவே டிஜிட்டல் மின்மீட்டர் பொறுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: