×

பந்தலூர் வியாபாரிகள் சங்க தேர்தல்

 

பந்தலூர்,ஆக.23: பந்தலூர் வியாபாரிகள் சங்க கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. நீலகிரி மாவட்டம்,பந்தலூர் வியாபாரிகள் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நேற்று பந்தலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வியாபாரிகள் சங்க தலைவர் அசரப் தலைமை வகித்தார்.செயலாளர் ஆண்டனி வரவேற்றார். பொருளாளர் காளிமுத்து முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க துணை தலைவர் தாமஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வியாபாரிகளின் பிரச்னைகள் மற்றும் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவர் பதவிக்கு மீண்டும் அசரப் மற்றும் ஜான்பாண்டியன் ஆகியோரும் செயலாளர் பதவிக்கு ஆண்டனி மற்றும் ஷனூஜா ஆகியோரும் போட்டியிட்டனர்.

வாக்குப்பெட்டி வைக்கப்பட்டு தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்து முறைப்படி தேர்தல் நடைபெற்றது.146 நபர்கள் வாக்களித்தனர். இதில் செல்லாத வாக்குகள் 3. மீண்டும் அசரப் 105 வாக்குகள் பெற்று தலைவராக வெற்றிப் பெற்றார். செயலாளராக ஆண்டனி 99 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் பொருளாளராக செல்வகுமார் போட்டியின்றி தேர்வு ஆனார். மேலும் 15 பேர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டன.

The post பந்தலூர் வியாபாரிகள் சங்க தேர்தல் appeared first on Dinakaran.

Tags : Pandalur Traders ,Association ,Bandalur ,Bandalur Traders Association ,Nilgiri District ,Pandalur ,Traders ,Dinakaran ,
× RELATED விளையாட்டு மைதானத்தை பாதுகாக்க வலியுறுத்தல்