×

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் சார்பில் நிதி உதவி

கூடலூர், செப்.21: கடந்த ஜூலை மாத இறுதியில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புளியம்பாறை, அய்யன் கொல்லி மற்றும் கையுண்ணி பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் சார்பில் நேற்று நிதி உதவி வழங்கப்பட்டது.

கூடலூர் சார்பு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி அப்துல் காதர் தலைமை வகித்து பயனாளிகளுக்கு நிதி உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி முகமது அன்சாரி, நீதித்துறை நடுவர் சசிகுமார், வழக்குரைஞர் சங்க தலைவர் சாக்கோ, மூத்த வழக்குரைஞர் பாஸ்கரன், நீதிமன்ற ஊழியர்கள் யோகராஜ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.

The post வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் சார்பில் நிதி உதவி appeared first on Dinakaran.

Tags : Wayanad ,Kudalur ,Puliyamparai ,Ayyan Kolli ,Kaiyunni ,Dinakaran ,
× RELATED மிலாடி நபி பேரணி