நுகர்வோர் சங்க தலைவர் மீது தாக்குதல்

சேலம், ஆக.4: சேலம் கன்னங்குறிச்சி அண்ணாநகரை சேர்ந்தவர் நாகேஷ் (59). இவர் சேலம் மாவட்ட நுகர்வோர் அசோசியேஷன் சங்க தலைவராக உள்ளார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அன்னதானப்பட்டி புட்டாமிஷன் ரோட்டில் உள்ள கடையில் நாகேஷ் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென அந்த கடைக்குள் புகுந்த மர்மநபர்கள் அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் கத்தியால் அவரது முகத்தில் கிழித்தனர். இதில் அவருக்கு ரத்தம் கொட்டியது. அவரது சத்தம் கேட்டு அங்கு பக்கத்து கடைக்காரர்கள் வந்தனர். இதனால் அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பினர். அவர்கள் எதற்காக அவரை தாக்கினர் என அவருக்கு தெரியவில்லை. பின்னர் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் சங்க நிர்வாகிகள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

The post நுகர்வோர் சங்க தலைவர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: